கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாங்கிரான்கொல்லை கிராமத்தில் குப்பமுத்து- பவளக்கொடி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகேஸ்வரன், நாகராஜ் என்ற 2 மகன்களும், பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் குப்பமுத்து-பவளக்கொடி தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்கியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குப்பமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் குப்பமுத்து திடீரென்று உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பவளக்கொடி மற்றும் உறவினர்கள் குப்பமுத்துவின் சடலத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர். இதனையடுத்து குப்பமுத்துவின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்தனர். இந்நிலையில் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் அழுதுகொண்டே இருந்த பவளக்கொடி அன்று இரவே திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார். அதன்பின் கணவன்-மனைவி இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.