Categories
தேசிய செய்திகள்

Vodafone Idea பயனர்களுக்கு வந்த புதிய சிக்கல்….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

Vodafone Idea பயன்தாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு கடனில் சிக்கி அந்நிறுவனம் தவிப்பதால், நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. முறையான தவணையை செலுத்தவில்லை எனில் வோடா போன் ஐடியா நிறுவனத்தின் 255 கோடி பயனர்கள் எதிர் காலத்தில் இன்னும் சிரமங்களை சந்திக்க நேரிடும். வோடாபோன் ஐடியா நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7000 கோடி ரூபாய் பாக்கிவைத்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த கடனை விரைவில் திருப்பிச்செலுத்தாவிட்டால், நவம்பர் மாதத்திற்குள் டவர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் வோடாபோன் ஐடியாவுக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறது. இந்த சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் vodafone idea பயனர்களின் மொபைல் நெட்வொர்க்கானது உடனே துண்டிக்கப்படும். இண்டஸ் டவர்ஸிடம் இருந்து வோடபோன்-ஐடியாவுக்கு இதுபற்றி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இண்டஸ்டவர்ஸின் இயக்குநர்கள் குழு கூடி vodafone idea தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் இண்டஸ் நிறுவனத்தின் நிதி தொடர்பாக பேசிய இயக்குநர்கள், vodafone idea ஐடியா நிறுவனத்திடமிருந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிப்பது பற்றி முடிவெடுத்து இருக்கின்றனர். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்குப் பின் நாட்டின் 3வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. எனினும் அண்மைக் காலமாக அந்நிறுவனத்தின் நிதிநிலை நன்றாக இல்லை.

Categories

Tech |