Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தில் தான் செயல்படும்…. வியாபாரிகளின் அறிவிப்பு…. பாராட்டிய கலெக்டர்…!!

திருப்பத்தூரில் கொரோனா தொற்று காரணமாக பகல் 1 மணிவரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சப்- கலெக்டர் வந்தனா கார்க், தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தாமாகவே முன்வந்து மொத்த, சில்லறை வியாபாரிகள் 14 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை, வியாபார நிறுவனங்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பை அளிப்பது என கையெழுத்திட்டு கொடுத்ததால் இவர்களை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |