Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. நம்பர் 30 ஆம் தேதிக்குள் பணம்….. வெளியான புதிய தகவல்….!!!

இந்தியாவில் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையிலீம் வேளாண் தொழிலை ஊக்குவிக்கக்கூடிய நோக்கத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மந்திரியின் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்ட விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 விதம் மூன்று கட்டமாக மொத்தம் ரூ.6000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகை நேரடியாக மத்திய அரசால் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 12வது தவணை தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் சிலருக்கு பண வரவு வைக்கப்படவில்லை என்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காரணம் கேட்டறிந்த போது வங்கி கணக்கில் eKYC செய்யப்படாத விவசாயிகளுக்கு பணம் வராது என்று தெரிவித்திருந்தனர். அதனால் பிஎம் கிஷான் இணையதளத்தில் உங்களின் கிசான் தொகை குறித்த நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தகுதி இருந்தும் பணம் கிடைக்க பெறாதவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பணம் வழங்கும் பணி ஒரு மாதத்திற்கு நடைபெறும். அதனால் விவசாயிகள்கவலை கொள்ள தேவையில்லை. வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் தகுதி உள்ள விவசாயிகள் அனைவருக்கும் தவணை பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |