விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரிச்சிகாட்டுப்புதூர் பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஈஸ்வரமூர்த்தி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் ஈஸ்வரமூர்த்தி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தோட்டத்தில் திடீரென ஈஸ்வரமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குண்டடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரமூர்த்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.