Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த விவசாயி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விவசாயி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக செல்லப்பாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் செல்லப்பவாவிற்கு சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மன உளைச்சளுக்கு ஆளான செல்லப்பா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் செல்லப்பாவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லப்பா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |