Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…. பின் நடந்த சம்பவம்….!!

கோவை அருகில் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதி ஜெயமங்கலத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனது மனைவி கலாமணியுடன் கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் வ.உ.சி. வீதியில் வசித்து வந்துள்ளனர். இதில் பாண்டியராஜன் அங்கு இருக்கக்கூடிய ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் வேலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி பாண்டியராஜன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பாண்டியராஜனின் மனைவி கலாமணி அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கலாமணி அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கலாமணியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இதனிடையில் காலமணியின் கணவர் பாண்டியராஜன் மாயமானதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனைதொடர்ந்து பாண்டியராஜனின் சொந்த ஊரான ஜெயமங்கலத்துக்கு  தனிப்படை காவல்துறையினர் சென்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தபோது அங்கும் வரவில்லை என தெரிவித்ததால் அங்கு முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாண்டியராஜன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனது நண்பரான கரகாட்ட கலைஞர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர், பெரியகுளம் போலீசாரின் உதவியுடன் நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டின் கதவு அடைக்கப்பட்டு இருந்தனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் பதுங்கியிருந்த பாண்டியராஜனை கையும் களவுமாக பிடித்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் பாண்டியராஜனை காவல்துறையினர் கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைச்சாலையில் அடைத்தனர்.

 

Categories

Tech |