விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை திரும்ப செலுத்த முடியாமல் மாணிக்கம் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணிக்கம் திடீரென வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயக்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் மாணிக்கத்தை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.