ரஷ்ய புகலிட கோரிக்கையாளர்களுக்கு விசா அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 172-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. அதன்படி, பின்லாந்து, எஸ்டோனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகள் ரஷ்ய மக்கள் தங்கள் நாட்டிற்குள் புகலிடம் கோரி நுழைய தடை அறிவித்திருக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் டிமிட்ரோ குலேபா, நாங்கள் ரஷ்ய நாட்டு மக்கள் மீது விசா தடை அறிவிப்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் புகலிடம் கோரும் ரஷ்ய மக்களுக்கு யாரும் தடை விதிக்க முன்வரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.