வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையாவுக்கு அவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை அவரது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கருப்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.