உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 78.69 % வாக்குப்பதிவாகி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 ஒன்றியங்களில் 4,49,054 நபர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 4 ஊராட்சிகளை சேர்த்து மொத்தமாக 78.69 % பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து 4 ஒன்றியங்களிலும் பதிவாகி இருக்கின்ற வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு கட்சியாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து வாக்குகளும் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணவிற்கும் மையங்களில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.