உலகின் சிறந்த கேப்டன் விராட் கோலி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார் .
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் செஞ்சூரியனில் இந்திய அணி வெற்றியை தொடர்ந்து உலகின் சிறந்த கேப்டன் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி புகழ்ந்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,” கேப்டன்சியை மாற்றுவது குறித்து பேச்சு உள்ளது . அதோடு வானிலையும் நமக்கு எதிராக உள்ளது .ஆனால் நாங்கள் என்ன செய்தோம் என்பதை பாருங்கள் உலகின் சிறந்த கேப்டன் என விராட் கோலி நிரூபித்துள்ளார் .பேட்டிங்கை பொறுத்தவரை இந்த தொடர் பழைய விராட் கோலியை மீண்டும் கொண்டு வரும் “இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.