பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கை மீறி பெரும்பாலான இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவம் சமைப்பது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அசைவ பிரியர்கள் காவல்துறையினரின் கண்களில் படாமல் ஊரடங்கை மீறி இறைச்சி, மீன் கடைகளை தேடி அலைந்துள்ளனர். அதேபோல் பெரம்பலூர் நகர் பகுதியில் இறைச்சி, மீன் கடைகள் விற்பனை மறைமுகமாக அமோகமாக நடைபெற்றுள்ளது.
அங்கு இறைச்சி, மீன் ஆகியவற்றை அசைவ பிரியர்கள் வாங்கி சென்றுள்ளனர். அதேபோல் கிராமப்புறங்களிலும் சில இறைச்சி, மீன் கடைகள் ஊரடங்கை மீறி திறக்கப்பட்டு வழக்கம்போல் விற்பனை நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.