விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையையும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். விநாயகர் சிலை நிறுவி வழிபடுவதற்கு மட்டும் தடை என்பதை தமிழக அரசு நீக்க வேண்டும். தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடை போடுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.