2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளாக் ஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலை ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது அலை இந்தியா வெளியிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. இதனையடுத்து பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,கொரோனாவை கட்டுப்பாடு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான பயணிகள் இனி முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சூழ்நிலையை பொறுத்து பயணிகள் முகக்கவசம் அணிவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதமோ, வழக்கோ பதிய முடியாது.