ஆன்லைன் வகுப்பினால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி தலைமுடியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் 10 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஆன்லைன் மூலமே கல்வி கற்று வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் இந்த மாணவி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இந்த மாணவியின் வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவரான ராஜேந்திரன் என்பவர் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் இந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்தபோது வயிற்றிலிருந்து 1 கிலோ எடையுள்ள முடிகலால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர். மேலும் மருத்துவர் கூறும் போது ஆன்லைன் வளர்ப்பினால் மாணவி மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தனது தலைமுடியை விழுங்கிருக்கலாம் என்று கூறியுள்ளார். உடனடியாக அறுவை சிகிச்சை அளித்ததினால் மாணவியின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.