‘விக்ரம் 61”படத்தின் கதை முதலில் தளபதி விஜய்க்காக எழுதப்பட்ட கதை என இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் அடுத்தடுத்து மகான், கோப்ரா போன்ற திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனையடுத்து, இயக்குனர் பா. ரஞ்சித் ”விக்ரம் 61” படத்தை இயக்குவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ”விக்ரம் 61”படத்தின் கதை முதலில் தளபதி விஜய்க்காக எழுதப்பட்ட கதை என இணையத்தில் தகவல் பரவி வருகிறது. மேலும், இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் கூறியதாகவும் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் பின்னர் இந்த படத்தில் விக்ரம் நடிப்பதாக செய்தி பரவி வருகிறது.