தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் சமீபத்தில் பொன்னின் செல்வன் படத்தில் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தின் கேஜிஎஃப் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.