மிகுந்த எதிர்பார்ப்புக்கு பின் வேட்புமனு பரிசீலினையில் வைகோவின் மனு ஏர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக நடைபெறும் தேர்தலுக்க்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வைகோவின் மனு ஏற்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு திமுக,மதிமுக கட்சினரிடையே இருந்து வந்த நிலையில் வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட 3 பேரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.