நாய் குறுக்கே சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் 22 வயதுடைய அஜய். இவர் மளிகை கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அஜய் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்டேட் வங்கி காலனியில் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முள்ளக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்து உள்ளது.
இதில் நிலை தடுமாறி அஜய் கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அஜயை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த அஜயின் கண்களை அவரது பெற்றோர்கள் தானம் செய்துள்ளனர் .