மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அந்தனூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் செந்தில் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் வேலைகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்பள்ளிப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் உடலை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.