Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட மோட்டார் சைக்கிள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருமங்களக்குறிச்சி பகுதியில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காயத்ரி  என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது தளவாய்புரம் நாற்கரசாலையில் வந்து கொண்டிருந்தபோது  இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த நெல்லை கருப்பன்துறை பகுதியில் வசிக்கும் பிலிப் என்பவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கயத்தாறு காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |