Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் மற்றும் விஷ்வா என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கோவையில் தங்கி ஆய்வக டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவிநாசி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அங்கு டயர் பஞ்சரானா லாரி ஒன்று சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியின் பின்பக்கத்தில் பிரகாஷ் மற்றும் விஷ்வா வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இதில் விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரகாஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விஷ்வாவை மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |