Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகர் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூபதி வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காடையூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் இன்டிகேட்டர் போடாமல் நிறுத்தியிருந்த லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராதவிதமாக பூபதி மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபதியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |