Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த ஏழுமலையை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஏழுமலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சேத்துப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |