Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் முத்துசாமி ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கம்மாள்புரம் அம்மன் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முத்துசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி சென்ற ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள செவல்பட்டி பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |