கணவர் கண் எதிரே டேங்கர் லாரி மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நளினா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவியுடன் வில்லிவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நளினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பிரபாகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நளினாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் டேங்கர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.