Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. காயமடைந்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

விபத்தில் 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் நிர்மல், மகேஷ் குமார் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் நிர்மல், மகேஷ் குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த முக்கூடல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |