டெல்லியில் நிலவும் கடும் குளிரில் இருப்பிடம் இல்லாமல் தவித்த வெளிமாநிலத்தவர்கள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று காலை 5.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர் பதிவான நிலையில், இன்று காலை 8.10 ஆக வெப்பநிலை அதிகரித்து பொழுதும் கடும் குளிர் தொடர்ந்து நிலவியது. டெல்லியில் கடும் குளிரால் இருப்பிடம் இல்லாமல் தவிர்த்த உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.