வேலூர் விஐடியில் தொழில்நுட்ப திருவிழாவில் ரோபோக்களின் போர் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் திராவிடாஸ் என்கின்ற அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவானது சென்ற 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் திராவிடாஸ் அறிவு சார்ந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் விஐடி மாணவ-மாணவிகள் உள்பட 13,000 பேர் பங்கேற்றார்கள்.
இவ்விழாவின் இரண்டாம் நாளில் ரோபோக்களின் எந்திர போர் நடந்தது. மேலும் வானத்தில் ட்ரோன்களின் போட்டி அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் மாணவர்களில் 150 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வி ஐ டி துணைவேந்தர், இணைத்துணை வேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.