Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளிய தலை காட்டவே முடியலை”…. விக்கி-நயனை திட்டி தீர்த்த குடும்பத்தினர்….!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார்.

இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக உள்ளது. இவர்கள் இருவரும் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நிறைய சட்டவிதிகள் இருக்கும்போது இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அளித்த பேட்டியில், தாய்மை அடைவது என்பது பெரிய விஷயம். ஆனால் கல்யாணமாகி 4 மாதத்தில் குழந்தை பிறந்தது என்பதை பற்றி என்ன சொல்வது, வெளியேவே சொல்ல முடியவில்லை. ஏதேதோ கேட்கிறார்கள் என்னை. அதனால் வெளியேவே தலை காட்ட முடியல. இதனால் வெளியே செல்வதற்கு குறைத்துக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் பெரியம்மா பிரேமா கூறியது, கல்யாணத்திற்கு முன்பு இவர்கள் எல்லாம் ரெடி செய்து விட்டனர். இதனால் தான் கல்யாணம் ஆனது 4 மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. 10 மாதத்திற்கு முன்பே இவர்கள் எல்லா ஏற்பாடு செய்து உள்ளனர். இப்பொழுது கல்யாணமாகி 4 மாதங்கள் குழந்தை பிறந்துள்ளது என்று விமர்சித்துள்ளனர்.

Categories

Tech |