மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் குடிசை கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சுரேஷ் 10-ம் வகுப்பு படித்து இருக்கின்றார். இவர் தற்போது பள்ளி திறக்காததால் கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவருடன் சுரேஷ் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தொரப்பாடி கே.கே நகரில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் பணிக்காக சுரேஷ் சென்றுள்ளார்.
அந்த வீட்டில் பல்பு மாட்டிக் கொண்டிருந்த போது திடீரென சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.