மோட்டார் சைக்கிளும், லோடு ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கனகவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தருவைகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கனகவேல் தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் பாலார்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற லோடு ஆட்டோ ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரரான கனகவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகவேலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரான குருசாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.