நாகையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மகன் வீர செல்வம்(வயது 19). இவர் இதே ஊரில் ஒளி – ஒலி அமைப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் இந்நிலையில் கருப்பம்புலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விழாவில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தபோது பலத்த மழை பெய்துள்ளது .
இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பான புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.