தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அங்கு ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 12,392 பேருக்கு தற்போது வரை கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 184 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 11 ஆயிரம் பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து 1,208 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை மருத்துவமனையில் பெற்று வருகின்றனர்.