Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற போது… வசமாக மாட்டி கொண்ட டிரைவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!

தடையை மீறி மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர்.

அதன்பிறகு காவல்துறையினர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மாரியப்பன் என்பதும், தடையை மீறி  மணல் கடத்திச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கடத்திச் சென்ற மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மணல் கடத்திய குற்றத்திற்காக மாரியப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |