பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரியில் பறக்கும் படையினர், சிறப்பு காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், போலீஸ் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் ஆவணமில்லாமல் ரூ. 57,000 பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடந்தினர். அந்த விசாரணையில் அவர் பெரம்பலூரில் வசித்து வரும் ராமலிங்கம் என்பவரது மகன் பாலாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த ஆவணமில்லாத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி என்பவரிடம் அதிகாரிகள் ஓப்படைத்துள்ளனர்.