Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வயலில் இறங்கி நாற்று நடும் அமைச்சர்…!!

கோவை சாடிவயல் பகுதியில் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து நெல் நாற்றுகளை அமைச்சர் வேலுமணி நட்டு  அப்பகுதி மக்கள் குறைகளை கேட்டறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு சலுகைகளும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவையை அடுத்த சாடிவயல் மற்றும் அருகே சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கல்குத்தி என்னும் பகுதியில் வாழும் மலை வாழ் மக்களுடன் சேர்ந்து வயலில் இறங்கி நெல் நாற்றுகளை நட்டார். இதையடுத்து ஆய்வில் பங்கேற்ற அதிகாரிகளிடம் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வுக்கு வந்த அமைச்சர் மலை வாழ் மக்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்ட சம்பவம் அப்பகுதியினர் இடம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |