Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டைக்குள் இதுதான் இருக்கா…. கைது செய்த காவல்துறையினர்….!!

லாரியில் கடத்திவரப்பட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு 2 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்திற்கு ஆந்திராவிலிருந்து லாரியின் மூலம் போதை பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட லாரி செல்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் சாதாரண உடையில் காவல்துறையினர் லாரியை பிடிப்பதற்காக காத்திருந்தனர்.

அப்போது சுங்கச்சாவடி 11.30 மணிக்கு வந்த அந்த லாரியை காவல்துறையினர் மடக்கி நிறுத்தினர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் லாரியை சோதனை மேற்கொண்டதில் 300-க்கும் மேற்பட்ட மணிலா விதை மூட்டைக்குள் 181 பண்டல்களில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆண்டிப்பட்டி கொண்டநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த முருகன், ஆண்டிபட்டியை சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு மணிலா விதை மூட்டையில் 362 கிலோ கொண்ட போதை பொருளை கடத்தி செல்வதாகவும் காவல்துறையினரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சுமார் 40 லட்சம் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு முருகன் மற்றும் பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |