14வது ஐபிஎல் தொடரில் , டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்க்கு பதிலாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார் .
கடந்த 23ம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பீல்டிங் செய்தபோது, ஸ்ரேயாஸ் அய்யர்க்கு தோள்பட்டையில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்திற்கு எதிராக, இந்தியா விளையாடிய இரண்டு தொடர் போட்டிகளில் விலகினார். அதோடு தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் பங்கு பெறவில்லை . இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின், கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் விலகியதால், அவருக்கு பதிலாக தவான், அஸ்வின், ரகானே ஆகிய வீரர்கள் கேப்டன் பட்டியலில் இருந்தனர்.
இவர்கள் மூவருக்கு பதிலாக ,இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான ‘ரிஷப் பண்ட்’, டெல்லி அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால், இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்படுகிறது. இதை பற்றி ஸ்ரேயாஷ் அய்யர் வெளியிட்ட கருத்தில் ,டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டது சிறப்பானது என்றும்,அவர் கேப்டன் பதவிக்கு தகுதியுடையவர் என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் .