Categories
மாநில செய்திகள்

வங்கி திவால் சட்டத்திருத்த மசோதா – மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!!

ஊரடங்கு காலத்தில் கடனைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்களிக்கும் வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

வங்கிகளில் கடன் பெற்று அதை செலுத்தாமல் உள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். இதனிடையே கொரோனா  பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தின்கீழ்  நடவடிக்கை எடுக்க விலக்களிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம் 2020ல் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கடந்த 15 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு இன்று நிறைவேறியது. இந்த மசோதா மூலம் ஊரடங்கு காலத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |