மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு லோகணேஷ், வேதவர்தன் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். தற்போது சிவப்பிரியா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை அடுத்து குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.