குடிபோதையில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய 2 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மன்காவரம் கிராமத்தில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல் அவரது நண்பர்களான மங்காபுரம் பகுதியில் வசிக்கும் தினேஷ், அப்பாவரம் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக அவரது 2 நண்பர்களும் கோகுலிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் 2 பேரும் கோகுலை பீர் பாட்டிலால் முகம், மார்பு என உடல் முழுவதும் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோகுலை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கோகுல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பீர் பாட்டிலால் குத்திய தினேஷ் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.