வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்னக்கோளாப்பாடி பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி புருசோத்தமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த புருஷோத்தமன் நிலத்தில் விஷத்தைக் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் புருஷோத்தமனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.