Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகமான கடன் தொல்லை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி விலக்கு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கருப்பட்டி மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சேகருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் சேகர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் வீட்டில் திடீரென மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது மனைவி மாரியம்மாள் சேகரை உடனடியாக மீட்டு கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து சேகரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |