வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டியில் நெல்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கி சுப்பையா தாஸ் என்ற மகன் உள்ளார். இவர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் இசக்கி சுப்பையா தாசை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் இசக்கி சுப்பையா தாசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யா வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் இசக்கி சுப்பையா தாசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் இசக்கி சுப்பையா தாசை கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.