Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர் மீது மதுரை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்ததால் காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து பிரபாகரனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்ததற்கான உத்தரவை சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |