நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பிளமிங்கோ, கொசுள்ளான், செங்கால்நாரை, ஊசிவால் சிறவி, கடல் காகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பறவைகளை காண ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்களும் அதிகளவில் சரணாலயத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.