வயிற்று வலி காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அத்தனூர் கிராமத்தில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாருமதி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறார். இதில் சாருமதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சாருமதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சாருமதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாருமதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.