Categories
தேசிய செய்திகள்

கிளாஸ் ரூமில் இருந்து கேட்ட சிறுமியின் அழுகுரல்…. ஊழியர் செய்த செயல்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்குட்பட்ட செக்டா பிர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இந்நிலையில் அந்த சிறுமியின் வகுப்பறையிலிருந்து அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தாள். அதாவது பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் மாவட்டம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டு விட்டு முன்னதாகவே வீடு திரும்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |